Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

ADDED : ஜூன் 20, 2025 12:34 AM


Google News
விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அடுத்த காவனுாரை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் பிரியதர்ஷினி, 25. அங்குள்ள கூட்டுறவு வங்கியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். கடந்த 15ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us