Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காவலாளியை தாக்கியவர் சரண்

காவலாளியை தாக்கியவர் சரண்

காவலாளியை தாக்கியவர் சரண்

காவலாளியை தாக்கியவர் சரண்

ADDED : செப் 12, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்தவர் கார்த்திக், 45; காவலாளி. இவரை, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் கந்தவேலு, விக்னேஷ், பாலாஜி, 24, ஆகியோர், செப்., 9ல் ஆயுதங்களால் தாக்கி, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் கடை வைத்திருக்கும் ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, அரசு பஸ் டிரைவர் கணேசன், 59, ஆகியோரையும் தாக்கினர். கந்தவேலு போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டார். விக்னேஷ் கை, கால்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. தப்பிய பாலாஜி, தங்களால் காயமடைந்த நபர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ, நேற்று முன்தினம் மாலை சமூக வவைதளங்களில் பரவியது.

துப்பாக்கிச்சூடு, மாவுக்கட்டுக்கு பயந்து, அவர் நேற்று முன்தினம் தன் பெற்றோருடன், விருத்தாசலம் ஸ்டேஷனில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us