Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசை வழிபாடு

தை அமாவாசை வழிபாடு

ADDED : பிப் 09, 2024 11:23 PM


Google News
பெண்ணாடம்: தை அமாவாசையையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை 9:00 மணியளவில் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, காலை 10:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்; 10:30 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us