நேபாளத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?
நேபாளத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?
நேபாளத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

சவால்கள்
பாலேந்திர ஷா நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றால், அவருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. முடங்கிப் போன பார்லிமென்டை பழைய அரசின் விசுவாசிகள், அரசியலில் வலுவாக ஊறிப் போன அறிவுஜீவிகள் என பல தடைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கும்.
மோசமான ஆபத்து
மற்றொரு சூழ்நிலை இதை விட ஆபத்தானது; அது ராணுவத்தின் தலையீடு. வன்முறையாளர்களை அடக்க நேபாளம் முழுதும் தற்போது ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மக்களை அமைதி பாதைக்கு திருப்பும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
மீண்டும் மன்னராட்சி
இந்த குழப்பங்களுக்கு நடுவே, பழைய பூதம் ஒன்று மீண்டும் கிளம்பி இருக்கிறது. அது, 2008ல் முடிவுக்கு வந்த மன்னராட்சியை மீண்டும் அமல்படுத்துவது. மன்னர் ஆட்சிக்கான ஆதரவு குழுக்கள், இந்த புரட்சியை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. சர்வாதிகாரம் நிறைந்திருந்தாலும், மன்னராட்சியின் போது அரசியல் ஸ்திரத்தன்மை இருந்ததாக, ஆதரவு குழுக்கள் பிரசாரம் செய்து வருகின்றன.
வாரிசு அரசியல்
இந்த புரட்சி முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துமா? அல்லது மீண்டும் ஒரு ஸ்திரமற்ற அரசாட்சிக்கு வித்திடுமா என்பது அடுத்து அமையப் போகும் அரசின் கைகளில் தான் இருக்கிறது. தவிர, 'நேப்போகிட்ஸ்' எனப்படும் வாரிசு அரசியல் அமைப்பை முற்றிலும் அழிப்பதற்கான துணிச்சல் புதிய அரசுக்கு இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.