Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது

திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது

திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது

திருநங்கையை தாக்கிய ஆசிரியர் கைது

ADDED : செப் 19, 2025 03:28 AM


Google News
Latest Tamil News
புதுச்சத்திரம்: திருநங்கையை திருமணம் செய்து, பணம் மோசடி செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த அத்தியாநல்லுாரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி, 28; சென்னை தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இவருக்கு, புதுச்சேரி, பொறையூர்பேட்டை சேர்ந்த திருநங்கை அனிதா, 28; என்ப வருடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து அத்தியாநல்லுாரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் சத்தியமூர்த்தி வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் அனிதாவிடம் 4 லட்சம் ரூபாயை மோசடி செய்தார். இவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, அனிதாவை, தாக்கி வீ ட்டை விட்டு விரட்டினார்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us