/உள்ளூர் செய்திகள்/கடலூர்/துறைமுகம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழாதுறைமுகம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
துறைமுகம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
துறைமுகம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
துறைமுகம் அரசு பள்ளியில் தமிழ் கூடல் விழா
ADDED : பிப் 24, 2024 06:15 AM

கடலுார் : கடலுார் துறைமுகம் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் தமிழ் கூடல் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை ஜெயந்தி தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் உலக திருக்குறள் பேரவை மாவட்டத் தலைவர் பாஸ்கரன், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில், தமிழாசிரியைகள் சுகிர்தரமணி, செல்வி, ஜெயந்தி, சாந்தி, லில்லி பெனிசிட்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.
முதுகலை தமிழாசி ரியர் சித்ரா விழாவை தொகுத்து வழங்கினார்.