புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி அங்காளம்மன் கோவிலில், அமாவாசையையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதையொட்டி, மாலை 6:00 மணிக்கு பால், தயிர், நெய், குங்குமம், தேன் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9.30 மணிக்கு அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டு பாடி ஊஞ்சல் உற்சவம் நடந்தன.
அதேபோல் பூவாலை மற்றும் சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.