வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
வேணுகோபால சுவாமிக்கு ஊஞ்சல் உற்சவம்
ADDED : செப் 21, 2025 11:25 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார்
நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் அமாவாசையையொட்டி கோமாதா பூஜை, சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது.
பாமா ருக்மணி சமேதராய் வேணுகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார்.
பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்ப சுவாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.