Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு

ADDED : மே 30, 2025 05:58 AM


Google News
Latest Tamil News
கடலுார்:வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் கடலுார் துறைமுகத்தில் துார புயல் சின்னத்தை குறிக்கும் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்கி 28ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்தாண்டு கோடையில் தொடர் மழையாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்கிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தரைக்காற்று 40 கி.மீ., வேகத்தில் வீசுகிறது. வங்கக் கடலில் துாரத்தில் புயல் இருப்பதை குறிக்கும் வகையில் கடலுார் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us