ADDED : ஜன 16, 2024 06:33 AM

நெல்லிக்குப்பம் : பொங்கலையொட்டி, நெல்லிக்குப்பம் பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் அருள்பாலித்தார்.
அதே போன்று, அருள்தரும் அய்யப்பன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.


