Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

லாரி டிரைவரை மிரட்டி ரூ.10 ஆயிரம் பறிப்பு

ADDED : செப் 05, 2025 03:21 AM


Google News
நெய்வேலி:லாரி டிரைவரை மிரட்டி செல்போன், பணம் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த புல்லையா மகன் திம்னய்யா 26; இவர் ஆந்திராவில் இருந்து நெய்வேலி என்.எல்.சி,யில் புதிய அனல் மின் நிலையத்திற்கு தாது பொருட்களை நள்ளிரவு நேரத்தில் ஏற்றி வந்துள்ளார்.

என்.எல்.சி., பி.சி.ஸ்டோர் அருகே லாரியை நிறுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் 3 பேர், லாரி டிரைவரை மிரட்டி செல்போன், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறித்து சென்றுவிட்டனர்.

இது குறித்து திம்னய்யா அளித்த புகாரின் பேரில், நெய்வேலி ெதர்மல் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us