Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

ஏட்டு குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல்

ADDED : ஜன 06, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே மாரடைப்பால் இறந்த ஏட்டு குடும்பத்திற்கு, சக போலீசார் சார்பில், நிதியுதவி வழங்கப்பட்டது.

பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் சொக்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் சிங்காரவேல், 40; பண்ருட்டி டி.எஸ்.பி.,அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி மாரடைப்பால் இறந்தார்.

இவருக்கு இந்துமதி என்ற மனைவியும், 9 வயதில் மகன் தர்ஷன் மகன், 6 வயதில் மகள் கனிஷ்கா உள்ளனர். உயிரிழந்த ஏட்டு குடும்பத்திற்கு, சக போலீசார் சார்பில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டி அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். இந்நிதியை எஸ்.பி., ராஜாராம், இறந்த ஏட்டு சிங்காரவேல் வீட்டிற்கு சென்று அவரது மனைவியிடம் வழங்கினார். டி.எஸ்.பி., சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us