Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமிகளை கர்ப்பமாக்கிய 2 வாலிபர் மீது போக்சோ வழக்கு

ADDED : ஜூன் 26, 2025 01:44 AM


Google News
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சிறுமிகளை கர்ப்பமாக்கிய இரண்டு வாலிபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த வெங்கட்டங்குப்பத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார்,22. இவர் 17வயது சிறுமி ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் நெருங்கிப்பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்தார். அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது சிறுமி நான்கு மாதம் கர்ப்பம் எனத்தெரிந்தது. புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் போலீசார், விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அதேபோல் கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த எரப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்,28. திருமணமானவர். இவர் கடந்த வருடம் 17வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப்பழகினார். அதில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறுமியை திருமணம் செய்து கொண்டார். அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற போது சிறுமி ஒன்பது மாத கர்ப்பம் எனத்தெரிந்தது. புகாரின் பேரில் திட்டக்குடி அனைத்து மகளிர் போலீசார், பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us