ADDED : ஜூன் 18, 2025 05:10 AM
குள்ளஞ்சாவடி: கல்லுாரி மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது கல்லுாரி மாணவர். இவரும், கடலுார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது கல்லுாரி மாணவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே மாணவி கர்ப்பமானார். புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், குழந்தை திருமணம் மற்றும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் மாணவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.