ADDED : ஜன 08, 2024 05:38 AM
கடலுார்: பெட்டிக்கடையில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் புருகீஸ்பேட்டை சுப்புராயலு நகரைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி சாந்தி 60; இவர் கடலுார் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மைதானம் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். தகவல் அறிந்த கடலுார் புதுநகர் எஸ்.ஐ., கதிரவன், சாந்தி பெட்டிக்கடையில் சோதனை செய்து 10 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தார்.
கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சாந்தியை கைது செய்தனர்.