மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை
மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை
மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை
ADDED : பிப் 11, 2024 01:57 AM

விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் முகமது தாபிக் மகன் முகமது சுலைமான், 28. இவர் கடந்த 5 ஆண்டுகளாக கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை மேல வீதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு சம்பவம் தொடர்பாக, நேற்று அதிகாலை 5:30 மணியளவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் முகமது சுலைமான் வீட்டிற்கு சென்று, அவரிடம் விசாரணை வேற்கொண்டனர்.
காலை 9:40 மணி வரை விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்களை எடுத்துக் கொண்டனர்.
வரும் 13ம் தேதி சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
விசாணையின் போது, மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.