Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

மங்கலம்பேட்டையில் என்.ஐ.ஏ., விசாரணை

ADDED : பிப் 11, 2024 01:57 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர் முகமது தாபிக் மகன் முகமது சுலைமான், 28. இவர் கடந்த 5 ஆண்டுகளாக கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை மேல வீதியில் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு சம்பவம் தொடர்பாக, நேற்று அதிகாலை 5:30 மணியளவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் முகமது சுலைமான் வீட்டிற்கு சென்று, அவரிடம் விசாரணை வேற்கொண்டனர்.

காலை 9:40 மணி வரை விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரிடம் இருந்து இரண்டு மொபைல் போன்களை எடுத்துக் கொண்டனர்.

வரும் 13ம் தேதி சென்னை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.

விசாணையின் போது, மங்கலம்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us