Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

மதுரையில் தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்க அமைச்சர் அழைப்பு

ADDED : மே 29, 2025 03:35 AM


Google News
கடலுார்: மதுரையில் நடக்கும் தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் கடலுார் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் தி.மு.க., பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1ம் தேதி காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. மதுரை பொதுக்கூட்டத்திற்கு கடலுார் கிழக்கு மாவட்ட ,மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட, மாநகர கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் பொதுக்குழு, சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்துடன் பங்கேற்க வேண்டும்.

பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்தில் கடலுார் மாவட்டத்திற்கு என அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் வைக்கப்பட்டுள்ள 'மினிட்' புத்தகத்தில் கையெழுத்திட்டு, தங்களுக்கான பொதுக்குழு 'பேட்ஜ்'-யை பெற்றுக் கொண்டு, காலை 8.00 மணிக்குள் பொதுக்குழு கூட்ட அரங்கத்திற்குள், கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us