ADDED : செப் 11, 2025 11:22 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார், தோப்பு மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த 9ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவஜனம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
கடந்த 10ம் தேதி யாக சாலை பூஜை, காயத்திரி ஹோமம், ரகசிய மகா மந்திர ஹோமம், திரவிய ஹோமம், இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று காலை ரக்ஷாபந்தனம், வேதிகா அர்ச்சனை, 4ம் கால யாக சாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து, கடம் புறப்பாடாகி விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.