Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

வியாபாரியை கத்தியால் வெட்டியவர் கைது

ADDED : ஜூன் 01, 2025 11:56 PM


Google News
கிள்ளை: கிள்ளை அருகே மர வியாபாரியை கத்தியால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.

கிள்ளை அடுத்த நவாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவரகள் சுந்தரமூர்த்தி, 60; காசிநாதன், 55; இருவரும் மர வியாபாரிகள். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் சி.முட்லுார் ஏ.மண்டபம் அருகே சுந்தரமூர்த்தியை, காசிநாதன் கத்தியால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசுமருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து சுந்தரமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, காசிநாதனை, கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us