/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரூ. 8.9லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடி நபர் கைது ரூ. 8.9லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடி நபர் கைது
ரூ. 8.9லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடி நபர் கைது
ரூ. 8.9லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடி நபர் கைது
ரூ. 8.9லட்சம் மோசடி குறிஞ்சிப்பாடி நபர் கைது
ADDED : ஜூலை 01, 2025 02:14 AM

கடலுார் : அரசு வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் ரூ. 8 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், தொழுதுார் அடுத்த பனையாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் மகள் எழிலரசி,36; முதுகலை பட்டதாரி. இவர், கடந்த ஆண்டு தொழுதுாரில் வாடகை வீட்டில் தங்கிய போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் மணி என்பவர் மூலம் குறிஞ்சிப்பாடி தாலுகா, வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன்,51; என்பவர் அறிமுகமானார்.
அவர் தனக்கு தலைமைச் செயலகத்தில் பல அதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், ஹிந்து சமய அறநிலையத்துறையில் படிப்புக்கேற்ற வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
இதனை நம்பி எழிலரசி நான்கு தவணைகளில் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கோவிந்தன் வங்கி கணக்கில் செலுத்தினார். பணத்தை பெற்றுக் கொண்ட கோவிந்தன், வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்தார்.
இதுகுறித்து எழிலரசி அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கோவிந்தனை கைது செய்தனர். கோவிந்தன் வேறு யாரையாவது ஏமாற்றினாரா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.