ADDED : செப் 22, 2025 11:24 PM
கடலுார் : லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வன்னியர்பாளையம் சந்திப்பில் பெட்டிக்கடை நடத்தி வரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா,66; என்பவரின் கடையில் சோதனை நடத்தினர். இதில், அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனர்.