ADDED : ஜூன் 06, 2025 07:52 AM
கடலுார், ; திருவதிகை சுப்பிரமணிய தேசிக சுவாமி கோவிலில், வரும் 8ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.
பண்ருட்டி அடுத்த திருவதிகையில், திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சுப்பிரமணிய தேசிய சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நாளை 7 ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:30மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.