Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்

ADDED : ஜூன் 07, 2025 02:58 AM


Google News
கடலுார் : கடலுார், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.

கடலுார், செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று மாலை வாஸ்து சாந்தி பூஜைகளுடன் துவங்கியது. இன்று (7ம் தேதி) காலை அக்னி ப்ரணயனம் நித்ய ஹோமம், பூர்ணாஹூதி, வேத ப்ரபந்த சாற்றுமுறையும், மாலை அஷ்டபந்தனம் சமர்பித்தலும் நடக்கிறது.

நாளை 8ம் தேதி காலை 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், புண்யாக வாசனம், ததுக்த ஹோமம், மகா பூர்ணாஹூதி நடக்கிறது. அதன் பின் கடம் புறப்பாடாகி 8:00 மணிக்கு மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

மாலை 6:30 மணிக்கு சீதா ராம திருக்கல்யாணம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சாந்த ஆஞ்சநேயர் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us