Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குள்ளஞ்சாவடி ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

குள்ளஞ்சாவடி ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

குள்ளஞ்சாவடி ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

குள்ளஞ்சாவடி ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

ADDED : ஜூன் 14, 2025 02:20 AM


Google News
Latest Tamil News
கடலுார்: குள்ளஞ்சாவடி ரவுடியை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் அஸ்வின்,23; இவர் கடந்த 22ம் தேதி, குள்ளஞ்சாவடி அண்ணா பாலம் அருகே கையில் கத்தியுடன் சாலையில் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தினார்.

தகவலறிந்த குள்ளஞ்சாவடி போலீசார், அஸ்வினை கைது செய்தனர். அஸ்வின் மீது குள்ளஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில் 'போக்சோ' , வழிப்பறி, ஆயுதவழக்கு உட்பட ஆறு வழக்குகளும், கடலுார் முதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் உள்ளன.

இவரது குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார், அஸ்வினை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள அஸ்வினிடம், போலீசார் உத்தரவு நகலை வழங்கி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us