/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குறைகேட்பு கூட்டம் : 465 மனுக்கள் மீது விசாரணை குறைகேட்பு கூட்டம் : 465 மனுக்கள் மீது விசாரணை
குறைகேட்பு கூட்டம் : 465 மனுக்கள் மீது விசாரணை
குறைகேட்பு கூட்டம் : 465 மனுக்கள் மீது விசாரணை
குறைகேட்பு கூட்டம் : 465 மனுக்கள் மீது விசாரணை
ADDED : செப் 02, 2025 03:40 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். பொது மக்களிடம் இருந்து 465 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தங்கமணி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.