ADDED : செப் 15, 2025 02:23 AM
வேப்பூர்: வேப்பூர் பிரைம் இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் தாத்தா-பாட்டிகள் தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் பெருமாள், அறங்காவலர்கள் கருப்பையா, தீபன், கனிமொழி, முதல்வர், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், மாணவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா - பாட்டிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், உறவினர்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.