ADDED : பிப் 25, 2024 04:36 AM
கடலுார் : உடல் நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், குண்டு உப்பலவாடியைச் சேர்ந்தவர் நாகலிங்கம், 75; உடல் நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிற்குள் முடங்கினார்.
இதனால், மனமுடைந்த அவர், கடந்த 22ம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
பின், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் நேற்று இறந்தார்.
கடலுார், தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.