Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

ADDED : அக் 20, 2025 09:40 PM


Google News
வடலுார்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.

நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 2 பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ், 60; ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர். இவர், தனது மகனின் வீட்டிற்கு சென்று விட்டு வடலுார் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெய்வேலி பஸ் ஸ்டாப் அருகில் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.

உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு கிசிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us