/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்புகடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு
கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் போராட்டம்! வெளிநடப்பு, தர்ணா, வாக்குவாதத்தால் பரபரப்பு

வாழை இலையுடன்
சுபாஷினி ராஜா (தி.மு.க.,): திருமண விழாவில் போடக் கூடிய மேஜை நாற்காலிகள் போட்டால் எப்படி உட்காருவது என கூறி, தாம் கொண்டு வந்த வாழைஇலையை மேஜை மீது விரித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
பா.ம.க., வெளிநடப்பு
சரவணன் (பா.ம.க): கூட்டத்திற்கு வரும்போது, காலி குடம், ராந்தல் விளக்கு போன்றவற்றை எடுத்து வந்தார். எனது வார்டில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தெரு விளக்குகள் எரிவதில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இதனை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் என, வெளியேறினார்.
கவுன்சிலர் தர்ணா
சசிகலா ஜெயசீலன் (தி.மு.க.,): பாதாள சாக் கடை வழிந்தோடுகிறது. அதிகாரிகளுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை. கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை வழங்கவில்லை எனக் கூறி மேயர் முன், தரையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினார்.
மேயர் சுற்றிவளைப்பு
அதைத்தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் பிரகாஷ், தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயகுமார், பாரூக்அலி, கீர்த்தனா ஆறுமுகம், கர்ணன் ஆகியோர் மேயரை சுற்றி வளைத்து வாக்குவாதம் செய்தனர்.
கவுன்சிலர்கள் தர்ணா
மாநகராட்சி கூட்டம் முடிவடைந்த பிறகும், ஏற்கனவே பன்றிகள் நடமாட்டம் குறித்து பேசிய விஜயலட்சுமி செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி தி.முக.., 8 கவுன்சிலர்கள் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.