ADDED : மே 11, 2025 01:45 AM

கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம், ராகவேந்திரர் சுவாமி கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
கடலுார் கூத்தப்பாக்கம், ராகவேந்திரர் சுவாமி கோவிலில் உலக நன்மை, மக்கள் நன்மை வேண்டி குத்துவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான சுமங்கலி பெண்கள் பங்கேற்று, குத்துவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.