Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சேர்க்கை உதவி மையம் அரசு கல்லுாரியில் துவக்கம்

சேர்க்கை உதவி மையம் அரசு கல்லுாரியில் துவக்கம்

சேர்க்கை உதவி மையம் அரசு கல்லுாரியில் துவக்கம்

சேர்க்கை உதவி மையம் அரசு கல்லுாரியில் துவக்கம்

ADDED : மே 11, 2025 01:45 AM


Google News
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோயில் எம்.ஜி. ஆர்., அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

கல்லுாரி முதல்வர் மீனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

காட்டுமன்னார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025-26ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி வரை, கல்லுாரி வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உதவி மையம் செயல்படும்.

பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல் ஆகிய 5 பாட பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள், சேர்க்கை உதவி மையம், மூலமாக கட்டணமில்லாமல் விண்ணப்பிக்க மதிப்பெண் பட்டியல், வகுப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், மொபைல் போன் உள்ளிட்ட ஆவணங்களுடன் வரலாம்.

மேலும், WWW.tngasa.in என்ற இணைய முகவரியிலும் விண்ணப்பிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us