/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுவன் கொலை வழக்கு; பெண்ணிற்கு இரட்டை ஆயுள் சிறுவன் கொலை வழக்கு; பெண்ணிற்கு இரட்டை ஆயுள்
சிறுவன் கொலை வழக்கு; பெண்ணிற்கு இரட்டை ஆயுள்
சிறுவன் கொலை வழக்கு; பெண்ணிற்கு இரட்டை ஆயுள்
சிறுவன் கொலை வழக்கு; பெண்ணிற்கு இரட்டை ஆயுள்
ADDED : மார் 25, 2025 07:40 AM

கடலுார்; இடப்பிரச்னையில் 4 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த பெண்ணிற்கு கடலுார் கோர்ட் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்,45; இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த முருகவேலுக்கும் இடப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.
செந்தில்நாதன் குடும்பத்தினரை பழிவாங்க முருகவேல் மகள் ரஞ்சிதா,29; முடிவு செய்தார்.
இதற்காக, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி மதியம் 3:00 மணிக்கு வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த செந்தில்நாதன் மகன் அஸ்விந்த்தை,4; அருகில் உள்ள முந்திரி தோப்பிற்கு அழைத்துச் சென்று கழுத்தை நெரித்தும், அடித்தும் கொலை செய்தார்.
புகாரின் பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ரஞ்சிதாவை கைது செய்து, கடலுார் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) ஷோபனாதேவி, வழக்கில் தொடர்புடைய ரஞ்சிதாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கதிர்வேலன் ஆஜரானார்.