ADDED : பிப் 10, 2024 05:45 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில், பா.ஜ., கடலுார் தென்மேற்கு ஒன்றியம் சார்பில் கொடியேற்றுதல் மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தென்மேற்கு ஒன்றிய தலைவர் பரதன் தலைமை தாங்கினார். கடலுார் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் வரவேற்றார்.
பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் அக்னி கிருஷ்ணமூர்த்தி, குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் சிவக்குமார், முருகன், சீனுவாசன், ஏழுமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.