/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
மாவட்டம் முழுதும் பா.ஜ.,வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

புவனகிரி
கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் புவனகிரி பகுதியில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். புவனகிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளில் பா.ஜ., வினர் கருப்புக்கொடி ஏற்றினர்.
பெண்ணாடம்
பெண்ணாடத்தில் பா.ஜ., மாவட்ட தலைவர் தமிழ் அழகன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு அக்கட்சியினர் 30க்கும் மேற்பட்டோர, தி.மு.க., அரசை கண்டித்து கோஷமிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திட்டக்குடியில், பா.ஜ., நகர தலைவர் சரவணன் தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம்
சிதம்பரம் பள்ளிப்படையில் முன்னாள் எம்,எல்.ஏ., அருள் தலைமையில், வீட்டில் கருப்பு கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் ராணுவ பிரிவு மாநில துணைத் தலைவர் கேப்டன் பாலசுப்ரமணியன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் தங்கமணி, வக்கீல் மணிமாறன், ஆனந்த், தாமரைக்கண்ணன், மணிவேல், சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.