ADDED : பிப் 25, 2024 05:00 AM

வடலுார் : வடலுாரில், கடலுார் மாவட்ட எடப்பாடியார் மக்கள் நலப் பேரவை சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பேரவை மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
பொருளாளர் நக்கீரன் வரவேற்றார். மாவட்ட இணை செயலாளர் சின்னராஜ், துணைத் தலைவர் ஆல்பர்ட், துணை செயலாளர் ரகுமான், துணைத் தலைவர் சுப்ரமணியன், செல்வராஜ், தங்கப்பன், ராஜபூபதி, ராஜவேல், ஜெகதீசன், ராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.