Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு 

இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு 

இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு 

இருதரப்பு மோதல்: 14 பேர் மீது வழக்கு 

ADDED : செப் 15, 2025 02:27 AM


Google News
நடுவீரப்பட்டு: பெரியநரிமேடு கோவில் சம்மந்தமாக ஏற்பட்ட தகராறில் இருதரப்பை சேர்ந்த 14 பேர் மீது போலீசார் வ ழக்கு பதிந்தனர்.

பாலுார் அடுத்த பெரியநரிமேடு கிராமத்தில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், மாரியம்மன் உள்ளிட்ட 3 கோவில்களின் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை உள்ளது.

இது தொடர்பாக கடந்த 12ம் தேதி பண்ருட்டி தாசில்தார் அலுவலகத்தில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் கோவிலுக்குள் செல்ல 3 மாதம் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பை சேர்ந்தவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இருதரப்பிலும் காயமடைந்த அபிநயா,22; சிவசங்கரி,60; வடிவேல்,47; வசந்தவேல்,23; பிரபாகரன்,35; ஆகியோர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், வசந்தவேல், பிரபாகரன், பழனிசாமி ராஜேந்திரன் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us