/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம் பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்
பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்
பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்
பண்ருட்டியில் நாளை அன்புமணி நடைபயணம்
ADDED : செப் 09, 2025 06:35 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் நாளை பா.ம.க., தலைவர் அன்புமணி நடத்தும் நடைபயணத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
கடலுார் வடக்கு மாவட்டம், பண்ருட்டி தொகுதிக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி நாளை (10ம் தேதி) வருகை தருகிறார். காலை 11:00 மணிக்கு சாத்திப்பட்டு ஊராட்சி, பலாப்பட்டு கிராமத்தில் பலா, முந்திரி விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார்.
மாலை 4:00 மணிக்கு பண்ருட்டி காந்திரோட்டில் இருந்து 'உரிமை மீட்க தலைமுறை காக்க' என்ற நடைபயணம் அன்புமணி தலைமையில் நடக்கிறது. பஸ் ஸ்டாண்ட் எதிரில் நடைபயணம் முடிந்து அவர் பேசுகிறார்.
இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்திரளாக பங்கேற்க வேண்டும்.