/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்
ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்
ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்
ஒரே நாளில் 4 பேர் சாவு; கிராம மக்கள் அச்சம்
ADDED : ஜன 05, 2024 12:40 AM
புவனகிரி : புவனகிரி அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முதியவர்கள் இறந்த சம்பவம் கிராம மக்களை அச்சமடைய செய்துள்ளது.
கடலுார் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ரங்கராாஜ்,70; தனபாக்கியம்,80; முருகன் கோவில் தெரு செல்வம்,68; மற்றும் திருப்பணிநத்தத்தை சேர்ந்த நாகப்பன்,73; ஆகிய 4 பேரும் கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில் 4 பேரும் நேற்று முன்தினம் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் துக்க நிகழ்விற்கு வெளியூரில் இருந்து வந்தவர்கள் குழப்படைந்தனர். மூவரின் உடல் நேற்று அடுத்தடுத்து கீரப்பாளையம் இடுகாட்டிலும், நாகப்பன் உடல் திருப்பணிநத்தம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
ஒரே கிராமத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முதியவர்கள் இறந்த சம்பவம் கிராம மக்களை அச்சமடையச் செய்துள்ளது.