/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது
கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது
கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது
கொள்ளைடியக்க திட்டம் நெய்வேலியில் 4 பேர் கைது
ADDED : செப் 16, 2025 07:13 AM
நெய்வேலி : நெய்வேலியில் வங்கியில் கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார், நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெய்வேலி வட்டம்-1, ஏ பிளாக் பகுதியில் தைலமர தோப்பில் சந்தேகத்திற்கிடமாக பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாாரித்தனர்.
இதில், வட்டம் 1ஐச் சேர்ந்த கட்டையன் (எ) தர்மசீலன்,31; ராஜ் மகன் சதீஷ்குமார்,26; , மேல்வடக்குத்து கருணாமூர்த்தி,36, இந்திரா நகர், மாற்றுகுடியிருப்பு அன்பரசன்,30; என்பது தெரிந்தது.
மது குடிக்கவும், சூதாட்டம் விளையாடவும் பணம் தேவை என்பதால் வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, 3 கத்தி மற்றும் உருட்டுக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், 2 பேரை தேடி வருகின்றனர்.