ADDED : ஜூன் 24, 2024 06:17 AM

சிதம்பரம், : சிதம்பரம், குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி செயலாளர் சேது சுப்ரமணியன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு யோகா ஆசிரியர்கள் ஆனந்தி பயிற்சியளித்தார்.
மாணவர்கள், யோகா செய்தனர். உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார், மணிகண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.