ADDED : ஜூலை 30, 2024 11:21 PM
கடலுார் : கடலுாரில் கூலித்தொழிலாளி தீராத வயிற்று வலியால், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
கடலுார் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் பிரவீன்ராஜ், 28; கூலித்தொழிலாளி, குடிப்பழக்கம் உடையவர்.
இவருக்கு நீண்ட காலமாக தீராத வயிற்று வலி இருந்தது.
பல இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை. கடந்த 20ம் தேதி வலி அதிகமானதால் மனமுடைந்த பிரவீன்ராஜ், வீட்டில் இருந்த எலி பேஸ்ட் விஷ மருந்தை எடுத்து சாப்பிட்டார்.
இதனை பார்த்த உறவினர்கள் உடன் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்து, மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.