Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

கஞ்சா பதுக்கிய இருவர் கைது

ADDED : மார் 15, 2025 12:53 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்; மங்கலம்பேட்டை அருகே ஜாமினில் வெளிவந்த வாலிபர் உட்பட கஞ்சா பதுக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் நாச்சியார்பேட்டை இளங்கோவன் மகன் சத்யகுமார், 21; கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான, இவர், ஜாமினில் வந்தார். பள்ளிப்பட்டு உறவினர் வீட்டில் இருந்த இவரை பார்க்க, நண்பரான எம்.பரூர் விஜயகுமார் மகன் கபிலன், 21; என்பவர் நேற்று சென்றிருந்தார்.

இவர்களிடம் கஞ்சா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மங்கலம்பேட்டை போலீசார் இருவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சத்ய குமார், கபிலனை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us