Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

சுவாமி ஊர்வலத்தில் மோதல்; இருதரப்பில் 4 பேர் கைது

ADDED : மார் 15, 2025 12:54 AM


Google News
காட்டுமன்னார்கோவில்; காட்டுமன்னார்கோவில் அருகே சுவாமி வீதியுலாவில் மோதிக்கொண்ட இருதரப்பை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குமராட்சி அடுத்த தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், 23; இவரது தரப்பினருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில், 22; தரப்பினருக்கும், செல்லியம்மன் கோவில், மாசி மாத உற்சவத்தில், மெய்யாத்துாரில் சுவாமி வீதி உலா சென்றபோது, மோதல் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.

இருதரப்பினர் மீது குமராட்சி போலீசார் வழக்குப் பதிந்து பாலமுருகன், 23; தனுஷ், 22; விக்னேஷ், 23; விமல், 22; ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், அப்பகுதியில். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க எஸ்.பி., ஜெயக்குமார், ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன் ஆகியோர் காவல் நிலையத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பினரும் ஒற்றுமையுடன் இருக்க அறிவுறுத்தினர்.அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us