/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
அரசு பஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
ADDED : ஜூன் 14, 2024 06:37 AM
விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி அடுத்த சத்தியவாடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 45. இவர் திட்டக்குடி அரசு பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் திட்டக்குடி - விருத்தாசலம் செல்லும் பஸ்சை ஓட்டினார். இதில், வேப்பூர் அடுத்த கீழ் ஒரத்துார் கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன், 43, நடத்துனர் பணியில் இருந்தார்.
அந்த பஸ்சில் பயணம் செய்த மணப்பாறை அடுத்த தாதப்பட்டி கிராமத்தை சேர்ந்த மருதுபாண்டி, 29, டிரைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் தகராறில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக விருத்தாசலம் அடுத்த தொரவளூர் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார், 42, என்பவரும் சேர்ந்து, கிருஷ்ணமூர்த்தியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
காயமடைந்த டிரைவர் கிருஷ்ணமூர்த்தி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.