Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

மதுபாட்டில் விற்ற மூவர் கைது

ADDED : ஜூன் 20, 2024 03:53 AM


Google News
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வயலுார் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், 48; திருக்கோவிலுார் பொம்மை தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 35; உடையார்பாளையம் அடுத்த விழுதுடையான் மேட்டு தெருவைச் சேர்ந்த ஜெயந்தி, 45, ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us