ADDED : ஜூன் 20, 2024 03:53 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வயலுார் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், 48; திருக்கோவிலுார் பொம்மை தெருவைச் சேர்ந்த ஏழுமலை, 35; உடையார்பாளையம் அடுத்த விழுதுடையான் மேட்டு தெருவைச் சேர்ந்த ஜெயந்தி, 45, ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்தனர்.