Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மங்கலம்பேட்டையில் திருக்கல்யாண உற்சவம்ம்

மங்கலம்பேட்டையில் திருக்கல்யாண உற்சவம்ம்

மங்கலம்பேட்டையில் திருக்கல்யாண உற்சவம்ம்

மங்கலம்பேட்டையில் திருக்கல்யாண உற்சவம்ம்

ADDED : ஜூன் 20, 2024 08:58 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

அதையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சி, கோ பூஜை, சுதர்சண ஹோமம் நடந்தது. 9:00 மணிக்கு பெருமாள், விஜய ஆஞ்சநேயர், விஷ்ணு துர்க்கை மற்றும் கருடாழ்வார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 4:30 மணிக்கு ராயர்பாளையம் நம்மாழ்வார் பஜனை நடந்தது.

மாலை 6:00 மணியளவில் மாலை மாற்றுதல், புண்யாகவாசனம், அக்னி ஆராதனம், கன்னிகா தானம் உள்ளிட்ட நிகழ்வுடன் மாலை 6:45 மணியளவில் தேவி பூதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நிர்மல்குமார், ஜனார்த்தனன் பட்டாட்சாரியார்கள் திருமணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து, ஊஞ்சல் சேவை, இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலா நடந்தது.

ஏற்பாடுகளை, திருமலை திருப்பதி ஆண்டாள் ரெங்கமன்னார் சபையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us