Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தண்டவாளத்தில் மனித கால் விருத்தாசலத்தில் பரபரப்பு

தண்டவாளத்தில் மனித கால் விருத்தாசலத்தில் பரபரப்பு

தண்டவாளத்தில் மனித கால் விருத்தாசலத்தில் பரபரப்பு

தண்டவாளத்தில் மனித கால் விருத்தாசலத்தில் பரபரப்பு

ADDED : ஜூன் 07, 2024 08:32 PM


Google News
Latest Tamil News
விருத்தாசலம்:விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் தண்டவாளத்தில் மனித கால் சிதைந்து கிடந்ததால் பரபரப்பு நிலவியது.

விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாமில் சேலம் ரயில் பாதையில் சிதைந்த நிலையில் மனித வலது கால் கிடந்தது. தகவலறிந்த ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சின்னசேலம் அடுத்த புக்கிரவாரி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் மனித இடது கால், கூத்தக்குடி ரயில் நிலையம் அருகே சிதைந்த நிலையில் மனித குடல் கிடந்தது.

இரு இடங்களில் கிடந்த கால்களை விருத்தாசலம் மற்றும் சேலம் ரயில்வே போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து உடலை தேடிவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us