/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாலத்தில் வாகனம் மோதியதில் விழுந்த முதிய தம்பதி பலி பாலத்தில் வாகனம் மோதியதில் விழுந்த முதிய தம்பதி பலி
பாலத்தில் வாகனம் மோதியதில் விழுந்த முதிய தம்பதி பலி
பாலத்தில் வாகனம் மோதியதில் விழுந்த முதிய தம்பதி பலி
பாலத்தில் வாகனம் மோதியதில் விழுந்த முதிய தம்பதி பலி
ADDED : ஜூன் 07, 2024 08:14 PM

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன், 70. இவரது மனைவி வேம்பு, 65. இந்த தம்பதிக்கு இரண்டு மகன், மகள் என அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. பார்வை குறைபாட்டால் அவதிபட்டு வந்த வேம்பு, சிகிச்சைக்காக சேலம் கண் மருத்துவமனைக்கு சென்றவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விருத்தாசலம் பஸ் நிலையம் வந்தார்.
அவரை, காசிநாதன் பைக்கில் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார். விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலையில் வயலுார் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்ட வேம்பு, 30 அடி உயரமுள்ள மேம்பாலத்தில் இருந்து விழுந்து உடல் நசுங்கி இறந்தார். படுகாயமடைந்த காசிநாதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் இறந்தார்.
விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.