ADDED : ஜூலை 22, 2024 01:23 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நாச்சியார்பேட்டை, அய்யனார்கோவில் தேருவைச் சேர்ந்த சேட்டு மனைவி வள்ளி, 48, என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வள்ளியை கைது செய்தனர்.