Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

ADDED : ஜூன் 30, 2024 05:33 AM


Google News
பெண்ணாடம், : பெண்ணாடம் அம்பேத்கர் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம், 55. விவசாயி. இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இதில் 4வது மகன் ஜெயசீலன், 25, கூலி வேலை வருமானத்தை வீட்டில் கொடுக்காமல் மது அருந்தி வந்துள்ளார்.

தாய் வளர்மதி தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஜெயசீலன், எனக்கு நீங்கள் ஏன் திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மனமுடைந்த ஜெயசீலன், நேற்று முன்தினம் காலை 9:00 மணியளவில் மதுவில், எலி பேஸ்ட் கலந்து குடித்ததாகக்கூறி, மயங்கி விழுந்தார்.

அவரை மீட்டு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us